தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழிகாட்டு நெறிமுறைகள் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவர இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த கல்வி ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கற்றல் முறை தான் நடந்து கொண்டு இருக்கிறது. சில தனியார் பள்ளிகளின் மீது ஆன்லைன் வகுப்புகள் குறித்து புகார்கள் வந்தது. இதனால் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஒரு குழு ஒன்றை நியமித்து உள்ளது. நெறிமுறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு நவம்பர் வரை நீட்டிப்பு? பிரதமரின் மறைமுக தகவல்!
மேலும், ஆன்லைன் வகுப்புகள் மீதன புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 12ம் வகுப்பு மதிப்பீடு முறை குறித்து தீர்மானிக்க குழு இன்றே அமைக்கப்படும். முதல்வர் இது குறித்து அறிவிப்பார். தொடர்ந்து தமிழக்தில் நீட் தேர்வு கண்டிப்பாக நடக்க விட மாட்டோம். மத்திய அரசு தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க முயற்சித்தால் நீதி மன்றத்துக்கு செல்வதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை செல்லும். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீட் தேர்வு குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறை குறித்து அதிகாரிகளை ஆலோசித்து வருகிறோம். அதன்படி, மாணவர்களின் முந்தைய மதிப்பெண்களை வைத்து தற்போது வழங்குவது. ஆனால் காலாண்டு,அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதால் அதற்கு முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்குவதற்கு சிலர் கூறுகின்றனர். இது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் வருகின்றது. சிபிஎஸ்இ வாரியமும் மதிப்பீடு செய்வதற்கு என்ன முறையை பயன்படுத்துகிறார்கள் என்பதையும் பார்த்து தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பீடு முறை இறுதி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.