தமிழக அரசின் ‘கல்பனா சாவ்லா’ விருது 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்காக ஆண்டுதோறும் ‘கல்பனா சாவ்லா’ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
விருது விண்ணப்பங்கள்
தமிழகத்தில் பல்வேறு விதமான விளையாட்டு துறைகளில் பங்கேற்று வீர, தீர சாதனைகளை புரியும் பெண்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு துறைகளில் உள்ள ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா’ விருதுகள், சுதந்திர தினத்தன்று அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை வழங்க விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. அதன் படி வெவ்வேறு விளையாட்டு துறைகளில் சாகசங்கள் புரிந்த பெண்கள், விருதுக்கான தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம், 30, கிழக்கு கிளப் சாலை, ஷெனாய் நகர் நீச்சல் குளம், ஷெனாய் நகர், சென்னை – 30 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பேருந்துகள் இயங்க அனுமதி, இரவு நேர முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரம், புகைப்படம், பத்திரிகையில் வந்த சாதனை செய்திகள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சாதனை விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை நான்கு புத்தகங்களாக தயார் செய்து மேலே கொடுக்கப்பட்ட முகவரிக்கு இன்று (ஜூன் 25) மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.