ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!
இலங்கையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜூன் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. தற்போது அங்கு 1,92,547 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். மொத்தம் அங்கு இதுவரை 1,566 பேர் உயிரிழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தொற்று பாதிப்பில் இருந்து 1,60,714 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் இலங்கையில் 3,306 பேர் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல் 39 பேர் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு மே மாத மத்தியில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
இந்தியாவில் மேலும் 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று – 2,887 பேர் பலி!!
ஜூன் 7ம் தேதி வரை முன்னதாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் பயணம் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.