இந்தியாவில் மேலும் 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று – 2,887 பேர் பலி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் மேலும் 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. அதேபோல் தற்போது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மேலும் 1,34,154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றினால் 2,887 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,37,989 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 2,11,499 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் – அரசு உத்தரவு!!
இதனை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 17,13,413 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் 21,59,873 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,37,82,648 ஆக அதிகரித்துள்ளது.