Google நிறுவனத்திற்கு இந்திய அரசின் வலியுறுத்தல் – அனுமதியற்ற செயலிகள் விவகாரம்!
ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வழங்கும் முறை அதிகரித்து வரும் நிலையில், அனுமதியற்ற பல செயலிகள் மூலம் பாதிக்கப்படும் மக்கள் நிகழ்வுகள் நடந்து வருவதால் இந்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளது.
அனுமதியற்ற செயலிகள்:
இந்தியாவின் டிஜிட்டல் கடன் சந்தை வேகமாக வளர்ந்து 2021-22ல் டிஜிட்டல் கடன்களில் 2.2 பில்லியன் டாலர்களை கையாண்டுள்ளது. ஆனால் இதே நேரத்தில் சட்டவிரோத செயலிகள் மூலம் அந்த தொகை எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. சட்டவிரோத கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவருகின்றனர். அடுத்த மாதம் முதல், கூகுள் இந்தியாவில் நிதிச் சேவைகளுக்கான புதிய விளம்பரக் கொள்கையை வெளியிடும் என்று அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் நிதிச் சேவை விளம்பரங்கள் இனி சரிபார்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனையில் நிதிச் சேவை நிறுவனங்கள் அரசின் உரிமம் பெற்றிருப்பதை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று காலத்தில் தான் இந்த ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் அதிக அளவில் பிரபலமடைய தொடங்கியது. மிகவும் விரைவாக கடன் வழங்கும் இந்த செயலிகள் மக்களுக்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதில், பல சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற நிறுவனங்களின் செயலிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் மோசடியான நிறுவனங்களின் செயல்பாட்டை தடுக்கும் வகையில், கடுமையான வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு இந்திய அரசாங்கமும் மத்திய வங்கியும் கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களை வசூலிப்பது அல்லது மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படாத நடைமுறைகள் அல்லது பணமோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த வலியுறுத்தல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்