அரசு மருத்துவமனை மருந்தாளுநர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 50 ஆயிரம் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் சிறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மருந்தாளுநர் காலி பணியிடங்கள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலர் தங்களது வேலைகளை இழந்து பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது அரசு மருத்துவமனை மற்றும் சிறு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலம் பலர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – தலைமை செயலாளர் அறிவிப்பு!!
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 50,000 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும், 2 ஆயிரத்துக்கு அதிகமான சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்கள் இன்றி இயங்கி வரும் நிலையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதுடன் பல ஆண்டுகளாக மருந்தாளுநர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில் அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருந்தாளுனர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது. மேலும் மருந்தாளுநர்களுக்கு பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மாற்றி அமைக்கும்படியும் கோரிக்கையில் முன்வைக்கப்பட்டது.