தமிழக ரேஷன் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அரசின் ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகி விட்டது. இந்த நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி செய்தியாளர்களிடம் தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் மற்றும் நுகர்வோர்கள் குறித்து பேட்டி அளித்து உள்ளார். இது குறித்து முழு தொகுப்பை கீழே பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
தமிழக அரசின் ஒரு முக்கிய திட்டமாக ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் இருக்கும் சாமானிய மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்ற ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களுக்கு இன்னும் பல அருமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் இவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தையும் விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீரென ஒரு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ரேஷன் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4000 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்கள் மட்டும் வருகிறதா என்பதை ஆய்வு செய்ய கூட்டுறவு துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் 2022 – அமைச்சர் முக்கிய தகவல்!
அதனை தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்து 11 மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது வரை 11 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க பட்டு இருப்பதாகவும், மேலும் விரைவில் 800 முதல் 3 ஆயிரம் ரேஷன் கார்டுகள் கொண்ட கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும் என்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.