இந்தியாவில் தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்.. அரசின் முடிவு இதுதான் – மத்திய அமைச்சர் பதில்!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கி:
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் நிலுவைத் தொகை அதிகரித்து வருகிறது. அதனால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வங்கிகளின் பங்கு விலக்கல் நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. அதன் வளர்ச்சியை பொறுத்து அடுத்தடுத்த வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யூடியூப் சேனலில் பகிரப்படும் மத்திய அரசின் திட்டங்கள் – எச்சரிக்கை பதிவு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த காலத்தில் மக்களின் சேமிப்புகளை அபகரித்த 135 நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.