அக்.31 வரை இரவு ஊரடங்கு உட்பட கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை இரவு ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது. மேலும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் மெல்ல இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் கொரோனா 3வது அலை மற்றும் பண்டிகை தினங்களின் வருகையை முன்னிட்டு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது புதுச்சேரி அரசு வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை இரவு ஊரடங்கு உட்பட கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு நாளும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
ஜீ தமிழ் சேனலில் ‘அன்பே சிவம்’ என்ற புதிய சீரியல் ஒளிபரப்பு – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
அரசின் அறிவிப்பின் படி, 100 பேர் திருமணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் 20 நபர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் முயற்சியில், அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தடுப்பூசி போடத் தவறினால் நிறுவனம் மூடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவும் பிற கட்டுப்பாடுகளும் அக்.15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
இதற்கிடையில் புதுச்சேரியில் இதுவரை மொத்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,27,296 ஆக உள்ளது. தற்போது செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 611 ஆக உள்ளது, 99 நோயாளிகள் மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 512 பேர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,24,836 ஆக உள்ளது. 7,10,180 பேர் முதல் டோஸ் மற்றும் 3,56,299 பேர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.