அரசு, தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்பட ஜார்க்கண்ட் அரசு அனுமதி அளித்தது.
அலுவலகம் திறப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளான முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வீதம் சரிந்து வருவதாலும், கடந்த 24 மணி நேரத்தில் 151 புதிய பாதிப்புகளுடன் ஒரு இறப்பு மட்டும் பதிவாகியுள்ளதால் ஊரடங்கை தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் உட்பட அனைத்து கடைகளும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!
மற்ற அனைத்து வார நாட்களிலும் இந்த கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வார இறுதி நாட்களிலும் மருந்து உள்ளிட்ட சுகாதார சேவைகள் தொடர்புடைய கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு வருகை தரும் மக்கள் ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். தவிர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளின் செயல்பாடுக்கான தடை நீடிக்கும்.
TN Job “FB Group” Join Now
திருமண நிகழ்வில் அதிகபட்சமாக 11 பேர் கலந்து கொள்ளலாம். மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் 9 ம் தேதி முதல் ஜார்கண்ட் முழுவதும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மற்ற சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.