இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

0
இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!
இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!
இந்திய பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த பயணிகள் ஜூன் 30 வரை வர பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

விமானங்களுக்கு தடை:

கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் சர்வதேச விமானங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அந்த நாடுகளை சேர்ந்த பயணிகள் தங்களது நாடுகளுக்கு வர அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் – கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்த வரிசையில் பிலிப்பைன்ஸ் நாட்டில், இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த பயணிகள் வர தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாடுகள் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் இருந்த நிலையில், இந்திய விமானங்கள் வர பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகள் நுழைய பிலிப்பைன்ஸ் அரசு விதித்துள்ள தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!