ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!

0
ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அரசு அதிரடி அறிவிப்பு!
ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - அரசு அதிரடி அறிவிப்பு!
ஏப்ரல் 5 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!

தீவு நாடான சமோவாவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தடுப்பு பணியாக அந்நாட்டு பிரதமர் ஏப்ரல் 5ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். இதனால் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்கபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தொற்று தீவிரமாக பரவியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் தடுப்பு பணியின் மற்றொரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வந்தது.

TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

தற்போது மற்ற நாடுகளில் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கும், இந்தியாவில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தீவு நாடான சமோவாவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக செய்தி அலுவலகத்தில் வேலை – ரூ.50,000/- சம்பளம் || கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு

அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அந்நாட்டு பிரதமர் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். அதன்படி தற்போது ஊரடங்கு ஏப்ரல் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 23,26,29 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும். அதற்குள் மக்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!