பிறந்தநாள் விழாவிற்கு ராதிகாவுடன் வரும் கோபி – அதிர்ச்சியில் செல்வி! சீரியலில் புதிய திருப்பம்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாள் விழாவிற்கு கோபியையும் அழைத்து வருவேன் என ராதிகா பாக்கியாவிடம் கூறியிருந்தார். சொன்னபடி பிறந்தநாள் விழாவிற்கு கோபியை ராதிகா அழைத்து வரும் போது செல்வி பார்த்து அதிர்ச்சி அடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பல மாதங்களாக குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு ராதிகாவை சந்தித்து தனது காதலை வளர்த்து வந்தார். யாரிடமும் சிக்காமல் தனது தந்திர புத்தியால் தற்போது வரைக்கும் கோபி தப்பித்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால், தற்போது கோபி கையும் களவுமாக மாட்டும் நேரம் வந்துவிட்டது. அதாவது ராமமூர்த்தி தாத்தாவின் 75ஆவது பிறந்த நாளை குடும்பத்தினர்கள் மிகவும் பிரமாண்டமாக பிளான் செய்துள்ளனர். இதனால் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளுமாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் பாக்கியா அழைத்துள்ளார்கள்.
தனியார்துறை வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளுமாறு ராதிகாவையும் பாக்கியா அழைத்திருக்கிறார். தனது கணவரையும் கண்டிப்பாக அழைத்து வருவேன் எனவும் ராதிகா பாக்கியாவிடம் கூறியிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்துள்ளதால் கோபி ராதிகாவிடம் சரியாக பேச முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
எப்படி யாருக்கும் சந்தேகம் வராமல் ராதிகாவை சந்திப்பது, எப்படி ராதிகாவை பிறந்தநாள் விழாவிற்கு வரவிடாமல் தடுப்பது என கோபி புலம்பிக் கொண்டிருக்கிறார். ராதிகாவிடம் உண்மையை கூறி விடலாமா என தனக்குள்ளேயே பேசி பைத்தியம் போல கோபி சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு பாக்கியாவின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கொண்டிருக்கிறார். ராதிகாவுடன் கோபி வருவதை செல்வி பார்த்து விடுவது போன்றும், கோபி செல்வியை பார்த்துவிட்டு எப்படி சமாளிக்கப் போகிறோம் என திணறும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.