கூகிள் பே செயலிக்கு ஏப்ரல் 6 வரை தடை – தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்று வரை கூகிள் பே உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி 2000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அடுத்த வாரம் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
ஊழியர்களின் சம்பள குறைப்பு இல்லை – புதிய ஊதிய கொள்கை ஒத்திவைப்பு!!
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கூகிள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் வைத்திருந்த பெயர், மொபைல் எண் கொண்ட பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனுவினை அளித்துள்ளார். அதில் கூகிள் பே உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி (வாக்குப்பதிவு நாள்) வரை தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.