கூகுள் நிறுவனத்தின் AI ஸ்டார்ட்அப் பயிற்சி – ஏப்ரல் 23 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!!
செயற்கை நுண்ணறிவு மற்றும் ML திறனை மேம்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பயிற்சி திட்டத்திற்கு ஸ்டார்ட்அப்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 வரை வரவேற்கப்பட்டுள்ளன.
பயிற்சி அறிவிப்பு
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், ஸ்டார்ட்அப் திறன் வளர்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) ஆகியவற்றில் திறனை மேம்படுத்துவதற்காக ஸ்டார்ட்அப் ஆக்சிலரேட்டர் என்ற திட்டத்தை கூகுள் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழாவது பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இந்திய விண்ணப்பதாரர்களிடம் இருந்து தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மதுபோதையில் வாகனம் ஒட்டிய வழக்கு – சென்னையில் ரூ.7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல்!!
சுமார் 8 பயிற்சி காலமாக திட்டமிடப்பட்டுள்ள கூகுள் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஆக்சிலரேட்டர் (GFSA) திட்டத்தின் கீழ் இதுவரை 130க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் தங்களது வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளன. இப்போது, AI அல்லது ML டேட்டாவைப் பயன்படுத்தி அல்லது பயன்படுத்தத் திட்டமிடும் இந்தியாவைச் சார்ந்த ஸ்டார்ட்அப்கள் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட்அப்கள் AI/ML, Cloud, UX, android, web, தயாரிப்பு உத்தி மற்றும் வளர்ச்சியை பெறுவதற்கான பயிற்சியை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.