தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ் – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெளியான அரசாணையில்,

தமிழக மருத்துவ துறையில் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப அரசுக்கு கோரிக்கை!!

எண்.34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எஸ்.1) துறை நாள். 30.03.2022-ன்படி 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC/ NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சான்றிதழ் பெற மாணவர்கள் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்களை மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் அல்லது தபால் மூலம் 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!