தமிழக மருத்துவ துறையில் காலிப்பணியிடங்கள் – உடனடியாக நிரப்ப அரசுக்கு கோரிக்கை!!
தமிழக அரசு மருத்துவத் துறையில் காலியாக உள்ள இயக்குனர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளது. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதனை நிரப்பும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் குரூப் 2 , 2A, குரூப் 4 & VAO, குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டது. மற்ற துறைகளை தொடர்ந்து மருத்துவம், காவல், கல்வி உள்ளிட்ட துறை காலிப்பணியிடங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
PPF திட்டத்தில் நீங்கள் இப்படி முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்? முழு விவரம் உள்ளே!
Follow our Instagram for more Latest Updates
மேற்கண்ட துறைகளை தொடர்ந்து தற்போது மருத்துவ துறையில் இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது காலியாக உள்ள 4 இயக்குனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் ஒருவர் பல்வேறு பணிகளை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் வேலை சுமையும், பொறுப்பும் அதிகரித்துள்ளது. அதனால் மருத்துவ துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு உடனடியாக இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.