PPF திட்டத்தில் நீங்கள் இப்படி முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்? முழு விவரம் உள்ளே!
அஞ்சல் அலுவலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது இத்திட்டத்தில் எப்படி முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது குறித்து பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி:
இந்திய அஞ்சல் அலுவலகத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது பெரும்பாலானோர் சேமித்து வருகின்றனர். இத்திட்டத்தில் உங்களுக்கு 7.1% வட்டி விகிதம் வரை கிடைக்கிறது. இத்திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த அதிகபட்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2023 பொங்கல் பண்டிகை – இலவச வேட்டி, சேலை வழங்காதது ஏன்?
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து 1.5 கோடி வரை சேமிக்கலாம். உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தில் (PPF) ரூ.12,500 வரை முதலீடு செய்தால் 30 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். இப்போது உங்களின் முதலீடு ரூ.45 லட்சமாக இருக்கும். அத்துடன் முதிர்வு காலத்தின் முடிவில் உங்களுக்கு சுமார் ரூ.1.09 கோடி ரூபாய் வட்டியுடன் சேர்த்து ரூ.1,54,50,911 வரை கிடைக்கும்.
இதையடுத்து நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் PPF கணக்கில் முதலீடு செய்தால், அதே மாதத்தில் அந்த பணத்திற்கு வட்டி கிடைக்கும். ஆனால் 6ம் தேதிக்கு மேல் முதலீடு செய்தால் அடுத்த மாதம் தான் உங்களுக்கு வட்டி கிடைக்கும். உதாரணமாக நீங்கள் இப்போது ஏற்கனவே ரூ 10 லட்சம் கணக்கில் வைத்துள்ளீர்கள். இப்போது ஏப்ரல் 5ம் தேதிக்குள் ரூ 50,000 முதலீடு செய்தால் மாதாந்திர வட்டியாக ரூ.6,212 கிடைக்கும். ஆனால் இப்போது நீங்கள் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு மேல் முதலீடு செய்தால் மாதாந்திர வட்டியாக ரூ 5917 மட்டுமே கிடைக்கும். அதன்படி நீங்கள் புதிய நிதியாண்டு தொடங்கியவுடன், ஏப்ரல் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால் நீங்கள் முதிர்வு காலம் முடிவடையும் போது கோடீஸ்வரர் ஆகலாம்.