சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.72 அதிகரிப்பு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.72 உயர்ந்து சவரன் ரூ.36,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு:
இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலர் மதிப்பு அத்துடன் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பெருமளவு பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். அதனால் பொதுமக்கள் பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். இதில் குறிப்பாக தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கினர். ஏனெனில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் நிதி நெருக்கடி காலத்தில் தங்கத்தை பயன்படுத்தி குறைந்த வட்டியில் கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் வெளிநாட்டினர்களும் அதிகளவு தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ரூ.36,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்துள்ளது.
அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.36,152க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு கிராமுக்கு ரூ. 9 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.4,519க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று மாலை நிலவரப்படி ரூ. 65 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.