பண்டிகையை முன்னிட்டு வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை:
தங்கம் என்றாலே பிடிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தங்க நகைகளை வாங்க எப்போதும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் இதில் அதிகமானோர் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை நோக்கி வந்ததால், சாமானிய மக்கள் முதல் அனைவரும் நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அது மட்டும் இல்லாமல், தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக 37 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இது அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே கூறலாம். இப்படி, பண்டிகை நாட்களை முன்னிட்டு தங்கம் விலை குறைந்தது காரணமாக நகை கடைகளில் மக்கள் அதிகம் காணப்பட்டனர்.
தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதி – இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.4,625 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.60.00 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்