தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி - கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி - கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் வாங்கிய நகைக்கடன்களில் நிபந்தனைக்கு உட்பட்ட கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதியில் உண்மையான ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்ககளில் வாங்கப்பட்டுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்திருந்தார். தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு வந்தது.

பாரதியின் 2 கண்ணம்மாவும் இணைந்து சீசன் 2 – வெளியான ப்ரோமோ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்போது தமிழகத்தில் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல் எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் முறைகேடு நடத்தியவர்கள் மீது பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானவை 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.

குழந்தையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

இந்த வகையில் கூட்டுறவுத் துறை மூலம் பெறப்பட்ட 35 லட்சம் நகைக்கடன்களில் 14.5 லட்சம் நகைக்கடன்கள் மட்டுமே நிபந்தனைக்கு உட்பட்ட நகைக்கடன்கள். அதனால் அந்த நகைக்கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். மேலும் 2022 ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன்பு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!