தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – வைரலாகும் தகவலின் உண்மை நிலவரம்!
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக தகவல் பரவி வருகிறது. இதனால் நகை அடமானம் வைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஏழை, எளிய மக்கள் குறைந்த வட்டியில் பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன்களை பெறுகின்றனர். இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
31.03.2021 அன்று வரை நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். 40 கிராமுக்கு உட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். இதற்காக பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானவர்க்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நகைக்கடன் பெற்ற 48,84 ,726 பேரில் 13,47,33 பேர் மட்டுமே தகுதியானவர்கள் பட்டியலில் உள்ளனர். 35,37,693 பேர் தகுதியற்றோர் பட்டியலில் உள்ளனர். இதனையடுத்து தேர்தல் வாக்குறுதியில் உள்ள படி அனைவரது நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு!
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் நகைகள் விரைவில் ஏலம் விடப்படும் என்ற கூறியுள்ளதாக போலியான தகவல் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றில் பரவி வருகிறது. அந்த தகவலில் சில மாவட்டங்களில் நகை ஏலம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.