தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு வெளியீடு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத பகுதிகளில் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டார். அதன்படி கூட்டுறவு சங்ககளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கலெக்டர்கள் உத்தரவு!
அதனால் இந்த தள்ளுபடி குறித்து முறையாக ஆய்வு மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து ஆய்வுகளை நடத்தியதில் சுமார் 48,84,726 நகைக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். இதில் 35,37,693 பேர் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்களுக்கு விரைவில் தள்ளுபடியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அகவிலைப்படி 3% உயர்வு!
அதன்படி ஊரக பகுதிகளில் தள்ளுபடி வழங்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் கூறியதாவது, துணைப் பதிவாளர் மற்றும் மண்டல இணைப் பதிவாளர் ஆகியோரால் சரிபார்க்கப்பட்டு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியாக உள்ளவர்களை தேர்வு செய்து அவர்கள் பெற்ற நகை கடன் தள்ளுபடி மற்றும் சான்றிதழை வழங்க வேண்டும். அத்துடன் தோ்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படும் உள்ளாட்சிப் பகுதிகளில் நகை கடன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றும் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.