தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – கிடைக்குமா? கிடைக்காதா? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கூட்டுறவு சங்களில் பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தகுதியான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுமா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை ஆய்வில் கண்டறியப்பட்டது. அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – அரசின் முடிவு என்ன?
அத்துடன் போலி நகைகளை கொண்டு நகைக்கடன் பெற்றனர். மேலும் இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பரிசீலனைக்கு உட்படுத்தி தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பட்டியலை தயார் செய்து அதன்பின் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 42 லட்சம் நபர்களில் 13 லட்சம் பேர் மட்டுமே தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு புது புது நிபந்தனைகளை அறிவித்து தள்ளுபடி வழங்குவதை தாமதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசின் திட்டத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பயனாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ‘நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்’ என்ற நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்றும் அத்துடன் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை விரைவில் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.