தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெற்றோர் பட்டியல்! குழு அமைப்பு!

0
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி பெற்றோர் பட்டியல்! குழு அமைப்பு!
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - தகுதி பெற்றோர் பட்டியல்! குழு அமைப்பு!
தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – தகுதி பெற்றோர் பட்டியல்! குழு அமைப்பு!

தமிழகத்தில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது இந்த தள்ளுபடி குறித்து ஆராய துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 13ம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் நகை கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வந்தது. இதில் குறிப்பாக போலி நகைகளை வைத்து நகை கடன் பெற்றவர்கள், பல சங்கங்களில் நகை கடன் பெற்றவர்கள் என பல்வேறு மோசடிகள் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – முக்கிய அறிவிப்பு!

அதனால் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்துடன் இது தொடர்பாக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில், தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான தகுதியான நபர்களையும் அத்துடன் தகுதியற்ற நபர்களையும் கண்டறிந்து பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிப்.7 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

மேலும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் நடைபெறுகிறதா என்பதை மண்டல இணை பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து நகை கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்களில் ஏஏஒய் குடும்ப அட்டை வைத்தவர்களை சங்க செயலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள் ஆகியோர் அவர்களின் குடும்ப அட்டைதாரரின் பொருளாதார நிலையை ஆய்ந்து துணை பதிவாளர் உறுதி செய்த பின் தள்ளுபடியை வழங்க வேண்டும். அத்துடன் இந்த குழு தயாரித்த பட்டியல் இறுதியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!