தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - வலுக்கும் கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி - வலுக்கும் கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கூட்டுறவு சங்களில் பெறப்பட்ட நகைக்கடன், பயிர்க் கடன்கள் தள்ளுபடி தற்போது தகுதியான நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கும் நகைக்கடன், பயிர்க்கடன்கள் தள்ளுபடி வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகை கடன் தள்ளுபடி

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் சட்ட பேரவையில் விதி 110 என்பதன் கீழ் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட நகைக்கடன் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு வழங்க முடிவு செய்தது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது ஆய்வில் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

இதில் குறிப்பாக போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெறுவது மற்றும் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. மேலும் இதற்கு வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருப்பது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டது. அதனால் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே தகுதியான நபர்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தகுதியான நபர்களின் பெயர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தகுதியான நபர்களுக்கு அவர்களது நகைகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மார்ச் 2 வரை நீட்டிப்பு! முழு விபரம் இதோ!

இந்த நிலையில் இந்த நகை கடன் தள்ளுபடி வேண்டும் என்று முள்ளுக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வசிக்கும் மலைவாழ் விவசாயிகள் சங்கம் சார்பில் முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதில் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலைவாழ் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!