தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர மற்றும் வார இருந்து நாட்களில் முழு ஊரடங்கு போன்றவைகளை ரத்து செய்துள்ளது. அதனை தொடர்ந்து 1 – 12 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி விடுமுறை அறிவிப்பு – மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு!
கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையாத நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் படி பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பள்ளி நுழைவு வாயிலில் வெப்பநிலை அளவு கண்காணிக்கப்பட வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி விடுமுறை அறிவிப்பு – மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு!
இந்த நிலையில் கூடுதல் தளர்வுகளாக இன்று (பிப்.16) முதல் தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 5 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதால் மாணவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.