தமிழகத்தில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மார்ச் 2 வரை நீட்டிப்பு! முழு விபரம் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றுடன் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் புதிய தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் கடந்த 1ம் தேதி அன்று 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி விடுமுறை அறிவிப்பு – மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு!
மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பற்றி தமிழக முதல்வர் அரசாணையை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகளை இன்று முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அமலில் உள்ள சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!
அது போல கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அத்துடன் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மட்டுமே பங்கேற்க வேண்டும். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் அத்துடன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்துதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும் இந்த கட்டுப்பாடுகள் வருகிற மார்ச் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.