விவகாரத்திற்கு பிறகும் பாக்கியாவிற்கு கோபி செய்த மட்டமான வேலை – கோவத்தில் கொந்தளிக்கும் ராமமூர்த்தி!
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக கோபி ராதிகாவின் திருமணத்திலேயே பாக்கியா சமைக்க இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
கோபி தன் கல்லூரி பருவ காதலி ராதிகா மீது காதல் வயப்பட்டு தன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கோபியின் பித்தலாட்டம் அறிந்து தன் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ள பாக்கியா தானாக முன்வந்து விவாகரத்து அளித்துவிட்டார். மேலும் குடும்ப பாரம் முழுவதும் பாக்கியா மீது தான் தற்போது விழுந்துள்ளது. கரண்ட் பில், ஸ்கூல் பீஸ் என செலவுகள் இருக்க பாக்கியா பெரிய சமையல் கான்ட்ராக்ட் ஒன்றை எடுக்கிறார்.
அது கோபி ராதிகா திருமண சமையல் கான்ட்ராக்ட் ஆர்டர் தான். இது பற்றி பாக்கியா அறியும் பொழுது கோபியிடமே சென்று தயவுசெய்து இந்த திருமணத்தை நிறுத்தாதீர்கள்.. இதில் நான் தான் சமைக்க போகிறேன். இந்த ஆர்டர் எனக்கு மிக முக்கியம் என்கிறார்.. பாக்கியாவின் இந்த பேச்சை கோபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் பாக்கியா சமையல் ஆர்டர் எடுத்த கம்பெனிக்கே சென்று பாக்கியாவிற்கு இந்த ஆர்டர் கொடுக்க கூடாது என சண்டை போடுகிறார்.
Exams Daily Mobile App Download
இதனால் மேனஜர் வேறு வழியின்றி பாக்கியாவிற்கு இந்த ஆர்டரை கொடுக்க மறுக்கிறார். கோபியை பிரிந்த பின்பும் பாக்கியாவிற்கு இது போன்ற பிரச்சனைகளை கோபி உண்டு செய்கிறார். இது சம்மந்தப்பட்ட காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்