ஜூன் 28 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவி வரும் நிலையில் கோவா மாநிலத்தில் ஜூன் 28ம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சம் வரை புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. இதனால் மாநில அரசுகள் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. எனவே மே மாதம் முதலே பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு ரத்து, ஜூலை 1 முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்தியாவின் சிறிய மாநிலமாக கோவாவில் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 51 சதவிகிதம் வரை தொற்று உறுதி விகிதம் பதிவாகி வந்தது. அம்மாநிலத்தில் சனிக்கிழமை 302 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன, ஒரே நாளில் 419 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் சில தளர்வுகளுடன் கோவாவில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று தளர்வுகள் அறிவிப்பு!
இதில் கூடுதல் தளர்வுகளாக மால்களில் உள்ள கடைகள், சினிமா அரங்குகள், தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ், பொழுதுபோக்கு பகுதிகள் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் மார்க்கெட்டுகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் இந்த ஆண்டு மே 9 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முதலில் விதிக்கப்பட்ட நிலையில், சில தளர்வுகளுடன் கட்டுப்பாடுகள் தொடன்கிர்த்து பல முறை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No malls ,theatres and shop open..why u r sending wrong news
Ebhiraj