தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்க திட்டம் – வந்தாச்சு புது ரூல்ஸ்!

0
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்க திட்டம் - வந்தாச்சு புது ரூல்ஸ்!
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்க திட்டம் - வந்தாச்சு புது ரூல்ஸ்!
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு வழங்க திட்டம் – வந்தாச்சு புது ரூல்ஸ்!

போதைக்கு அடிமையானவர்களை போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்:

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட திட்டங்களை செயல்படுத்த காத்து கொண்டுருக்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் 100 மதுபான கடைகள் நவீனமயமாக்க தயாராகி வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500 மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட பொருளாதார செலவை சமாளிக்க மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தசரா பண்டிகையை முன்னிட்டு 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – கல்விவாரியம் உத்தரவு!

இந்நிலையில், டாஸ்மாக் நிறுவன ஊழியர்களுக்கான பரிசு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, மதுபான கடைகளுக்கு புதிதாக வருவோர், மாணவர்கள் மற்றும் போதைக்கு அடிமையாகியுள்ளவர்களை கண்டறிந்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த குடி பழக்கத்தில் இருந்து விடுவிக்க முயன்றால் அந்த ஊழியர்களுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கூடிய விரைவில் வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு பில் கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!