பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பண்டிகை நாளுக்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி:
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக பரவியது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டாட்டத்தை தொடர்ந்து விநாயகர் சிலை விற்பனை அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷம் – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை அனைத்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் தங்கள் வீடுகளில் பண்டிகையை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
தனிநபர்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்றும் இதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியுள்ளார்.