கொரோனாவுக்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷம் – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

0
கொரோனாவுக்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷம் - பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கொரோனாவுக்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷம் - பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
கொரோனாவுக்கு எதிராக செயல்படும் பாம்பின் விஷம் – பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

ஜரராகசு என்று அழைக்கப்படும் ஒரு வகை பாம்பின் விஷம் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய திறன் கொண்டதாக பிரேசில் விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொரோனா வைரஸை 75% கட்டுப்படுத்துவதாக முதல் கட்ட ஆய்வுத் தகவல் கூறுகிறது.

கொரோனா வைரஸ்

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் உலகளவில் பரவி மிகப்பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது. இதுவரை உலகம் கண்ட உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த கொரோனா வைரஸ் செயல்திறன் கொண்டதாக காணப்படுகிறது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உருவாக்கப்படும் தடுப்பூசிகளையும் மீறி, அதிகளவிலான பாதிப்புகளை உருவாக்கி உலக விஞ்ஞானத்துக்கே ஒரு சவாலாக இந்த வைரஸ் மாறி இருக்கிறது.

தமிழகத்தில் 32 சுங்கச் சாவடிகள் குறைப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!

என்றாலும் இவ்வைரஸின் மீதான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளிலும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் வெளியிப்பட்ட அறிவியல் இதழான Molecules இல், ‘ஜரரகுசு என்றழைக்கப்பட கூடிய பாம்பின் விஷம் உருவாக்கிய மூலக்கூறுகள், குரங்கின் செல்களில் கொரோனா வைரஸின் திறனை 75% கட்டுப்படுத்துகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரேசில் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாம்பின் விஷத்தை வைத்து கொரோனா வைரசுக்கு எதிரான ஆய்வை நடத்தியுள்ளனர்.

இந்த விஷத்தில் உள்ள மூலக்கூறுகள் குரங்கின் செல்களில் இருக்கும் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தை தடுக்கிறதாக கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா பதிப்பை ஏற்படுத்தும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முதல் படியாக கருதப்படுகிறது. ‘பாம்பு விஷத்தின் இந்த மூலக்கூறு கொரோனா வைரஸின் மிக முக்கியமான புரதத்தை தடுக்க முடிந்தது’ என சாவ் பாலோ பல்கலைக்கழக பேராசிரியரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான ரபேல் கைடோ தெரிவித்துள்ளார். இந்த மூலக்கூறு ஒரு பெப்டைட் அல்லது அமினோ அமிலங்களின் சங்கிலி ஆகும்.

அதாவது இந்த மூலக்கூறை, PLPro எனப்படும் கொரோனா வைரஸின் நொதியுடன் இணைக்க முடியும். இது மற்ற உயிரணுக்களை காயப்படுத்தாமல், கொரோனா வைரஸின் இனப்பெருக்கத்தை தடுக்கிறது. இது முதல் கட்ட ஆய்வாக இருந்தாலும், இந்த பாம்பின் விஷத்தை எடுப்பதற்காக அவற்றை வளர்க்க தேவை இல்லை என்றும், அவற்றை ஆய்வகங்களிலேயே உருவாக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீடு செய்து, வைரஸ் உயிரணுக்களுக்குள் நுழைவதை தடுக்க முடியுமா என்பது குறித்து அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ஆய்வு இறுதி கட்டத்தை எப்போது அடையும் என எவ்வித தகவல்களையும் ஆராய்ச்சியாளர்கள் பகிரவில்லை. கொரோனா வைரசுக்கு எதிரான திறன் கொண்ட ஜரராகசு எனும் பாம்பு பிரேசில் நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பாம்பு வகைகளில் ஒன்றாகும். இவை சுமார் 6 அடி அதாவது 2 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இவ்வகை பாம்புகள் கடலோர அட்லாண்டிக் காடுகளிலும், பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!