இந்தியாவில் உடனடியாக முழு ஊரடங்கு? மருத்துவ சங்கம் கோரிக்கை!!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்த பீகார் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பீகார் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 13,534 புதிய நோய்த்தொற்றுகளும், 97 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உடனடியாக பொது முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மே மாத நேரடி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு – மத்திய அரசு உத்தரவு!!!
இது குறித்து தேசிய ஐ.எம்.ஏவின் தலைவர் டாக்டர் சஹஜானந்த் பிரசாத் சிங் தெரிவிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 15 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும் பீகார் பிரிவு ஐ.எம்.ஏ இன் செயல் தலைவர் டாக்டர் அஜய் குமார் தெரிவிக்கையில், இந்தியாவின் மூத்த மருத்துவர்கள் பலர் பொதுமுடக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என கூறியுள்ளார்.
தொடர்ந்து பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் பி.கே.சிங், இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் டாக்டர் என்.ஆர் பிஸ்வாஸ், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் வித்யாபதி சவுத்ரி, நேதாஜி சுபாஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை டாக்டர் உதய் குமார் உட்பட அனைவரும் பொது முடக்கம் குறித்து ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தவிர அமெரிக்காவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் போது, ஊரடங்கை கட்டுப்படுத்த முடியாமல் போராடியதையும் அவர் மேற்கோளிட்டு காட்டியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேவையான கொரோனா விழிப்புணர்வுகளை கொடுக்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்