தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் 5 மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். இதில் தமிழகமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு அமல்:

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்தது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் ஜூன் மாதத்தில் தான் 4ம் அலை பரவும் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாளை (ஜூன் 8) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த நிலையில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்த கடிதத்தில் இவர் கூறியுள்ளதாவது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அத்துடன் கொரோனா பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதனால் சென்னை, செங்கல்பட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!