நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வெளியான பரபரப்பு தகவல்!
சீனாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவ தொடங்கியது. கொரோனா தொற்று எதிராக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி வேகமாக பரவுகிறது. இதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கம் – பிரதமர் முக்கிய அறிவிப்பு!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு தங்கள் இயல்பு வாழ்க்கையும் வேலையும் இழந்தனர். அதன் காரணமாக பொருளாதார நிலையில் மிகவும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் தொற்று அதிகம் பரவியுள்ள தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
CBSE 2ம் பருவ பொதுத்தேர்வுகள் ரத்து? உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!
இதனை தொடர்ந்து சீனாவின் அனைத்து பிராந்திய அதிகாரிகளுக்கு தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. இதில் தெரிவித்தாவது, கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை ரத்து செய்ய கூடாது மற்றும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் திரையரங்குகள், உணவகங்கள், வணிக வளாகங்களை முழுவதுமாக மூடக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.