நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

0
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

நெதர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் நாட்டில் கொரோனா தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் போது தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் இதற்கு எதிராக பல்வேறு வகையான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இந்த வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸை விட வீரியம் மிக்கதாக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சொன்ன ஹாப்பி நியூஸ்!

அதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக சீனா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு திட்டமிட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை குளிர் காலம் நிலவும். இந்த குளிர் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 கோடியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் கொரோனா பரவலின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!