இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்? கொரோனா நான்காம் அலை எதிரொலி!
இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதனால் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வகை உயிர் கொல்லி வைரஸ் வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாகியது. கடந்த வருடம் உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் அதிக வீரியத்துடன் பரவத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்தது.
CBSE 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
அதன் தொடர்ச்சியாக தினசரி உயிரிழப்புகளும் அதிகரித்தது. இந்த இரண்டாம் அலை கொரோனா நடுத்தர மற்றும் குழந்தைகளையும் தாக்கியது. அடுத்ததாக கடந்த ஆண்டின் இறுதியில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுத்து இதனை தடுக்கும் பணியாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டது. தற்போது 15 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா நான்காம் அலை பரவும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.