அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

0
அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு - மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு - மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவில் தளர்வு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!

கார்கோன் மாவட்டத்தில், வன்முறையை தொடர்ந்து பண்டிகை காலக்கட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த வகையில் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த 11 மணி நேர ஊரடங்கு உத்தரவை தற்போது உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 24 பேர் காயமுற்றனர். மேலும் வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீஸ் அதிகாரியான சித்தார்த் சவுத்ரி துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தார். மூத்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுதவிர கார்கோன் மாவட்டம் முழுக்க வன்முறையில் ஈடுபட்ட 64 வழக்குகளில் தொடர்புடைய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

மேலும் வன்முறை வெடித்ததன் பேரில் கார்கோனின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அம்பேத்கர் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, நடந்து முடிந்த ரம்ஜான், அட்சய திருதியை கொண்டாட்டங்களை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு காரணமாக பெருநாள் தொழுகைகள் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருத்து.

Exams Daily Mobile App Download

மேலும், அனைத்து சமூக மக்களின் சம்மதத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவைத் தளர்த்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் பெட்ரோல் பங்குகள் திறக்கப்படும். ஆனால் மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்படும் என்று கார்கோனின் துணைபிரிவு நீதிபதி மிலிந்த் தோக் செவ்வாய் இரவு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பயணிகள் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும் என்றார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!