நாடு முழுவதும் ஜன.25 வரை முழு ஊரடங்கு அமல்? பிரதமர் விளக்கம்!
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். மேலும் முழு ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று அடுத்தடுத்த நிலைகளாக உருவெடுத்து அதிக வீரியத்துடன் தற்போது வரை மக்களை தாக்கி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் இந்நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக தொடர் ஊரடங்கையும் கடைபிடித்தன. இதன் விளைவாக ஓரளவு பாதிப்புகள் கட்டுக்குள் வந்தது. மறுபுறம் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்தியாவில் கொரோனாவிற்கு புதிய மருத்துவ சிகிச்சை வழிகாட்டுதல் – மத்திய அரசு வெளியீடு!
இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் உள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 14 ஆம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார் . அதன் படி உடற்பயிற்சிக் கூடங்கள், கடைகள், சலூன்கள் போன்றவை, மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். பார்கள், உணவகங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் 25 ஆம் தேதி வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று மேன்மேலும் அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.