காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் காரணமாக இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அம்மாநில மக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள சர்வேதேச நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் அண்மை நாட்களில் சீனா, இந்தியா ஆகிய பெரு நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை – அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து, குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தையொட்டி இன்று விழா நடத்தப் பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி கொரோனா ஊரடங்கு குறித்த தகவலை தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சாதனை பொதுமக்களின் ஆதரவால் சாத்தியம் ஆகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே இரு பிரிவினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் திடீரென ஒருவரை ஒருவர் மிக கடுமையாக தாக்கிக் கொண்டனர். முதலில் இரு பிரிவினர் இடையே சிறு வாக்குவாதமாக தொடங்கி அதன்பின் தாக்குதலில் முடிந்தது. அதனால் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று (ஏப்ரல் 30) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது என்று அதிரடியாக அறிவித்து உள்ளார்.