மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அரசு நிர்வாகம் விளக்கம்!
கடந்த சில நாட்களாக ஹாங்காங் நகரத்தில் கொரோனா புதிய தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை அந்நகரத்தின் தலைமை நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு
சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஹாங்காங்கில் ஒமிக்ரான் பரவல் தொற்று எல்லை மீறி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது ‘ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பரவலின் அளவு மற்றும் வேகம் அதிகரித்து வந்தாலும், பாதிப்பு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர நகரம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கும் எந்த திட்டமும் இல்லை. வைரஸின் பரவலின் அளவு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் எங்கள் திறனைக் குறைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதற்கிடையில் ஹாங்காங்கில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 1,510 கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இலக்கு வைக்கப்பட்ட பரிசோதனைகளை தொடங்கவும், மாவட்ட அடிப்படையிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஹாங்காங் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா சிகிச்சையில் தனிமைப்படுத்தும் வசதிகளாக பயன்படுத்த அரசாங்கம் ஹோட்டல்களை தேடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் விருந்தோம்பல் துறையில் இருந்து சுமார் 10,000 அறைகளை நிர்வாகம் பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொடர்பான எந்தவொரு பரவலான நோய் தொற்றுகளையும் வெற்றிகரமாக தடுத்த பிறகு, ஹாங்காங் அதன் மோசமான தினசரி கொரோனா பாதிப்புகளுடன் தற்போது போராடி வருகிறது. குறிப்பாக வயதானவர்களின் குறைந்த தடுப்பூசி விகிதங்களால் அதிகரித்து வரும் பாதிப்புகள் ஹாங்காங் நகரை பாதித்து வருகிறது.
மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா? அரசு பரபரப்பு விளக்கம்!
இதனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தவிர ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்க காத்திருப்பதாகவும், கொரோனா பரிசோதனை வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டால் நேர்மறை பாதிப்புகளை உறுதிப்படுத்துவதில் தாமதம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.