தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படப் போவது யார்? ஒரு அலசல்!

0
தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முழு ஊரடங்கு அமல் - பாதிக்கப்படப் போவது யார்? ஒரு அலசல்!
தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முழு ஊரடங்கு அமல் - பாதிக்கப்படப் போவது யார்? ஒரு அலசல்!
தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதி முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படப் போவது யார்? ஒரு அலசல்!

தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடுகள் மூலம் பலர் பாதிக்கப்பட உள்ளனர்.

பாதிக்கப்படப் போவது யார்?

தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் தினசரி பாதிப்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும் சுமார் 1489 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .கொரோனா தொற்று பரவல் டெல்லியை போல் மோசமாகும் முன்பு நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி? கல்லூரிகளுக்கு ஜன.20 வரை விடுமுறை!

இந்தக் கூட்டத்தில் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முக்கியமான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் சாமானிய மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு உள்ளது. இதன் அடிப்படையில் ரீடைல் வர்த்தகச் சந்தை, நுகர்வோர் சார்ந்த சாலையோர வியாபாரிகள், சிறு கடைகள் ஆகியவற்றின் வர்த்தகம் பாதிக்கப்படும்.இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்ந்த ஊழியர்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் வருமானம் பாதிக்கப்படும்.

சென்னையில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில் தியேட்டர், பார், பப், விளையாட்டு மைதானம், மால், போன்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களுக்கு வார இறுதி நாட்களில் தான் அதிகளவிலான பொது மக்கள் செல்வார்கள். இதனை தொடர்ந்து ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம், டெலிவரி செய்பவரின் வருமானமும் பாதிக்கும். இந்த வகையில் கல்லூரி மாணவர்களின் ஜனவரி மாத தேர்வு ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!