தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ஆட்டோ & கார் ஓட்டுனர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ஆட்டோ & கார் ஓட்டுனர்கள் கவனத்திற்கு - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ஆட்டோ & கார் ஓட்டுனர்கள் கவனத்திற்கு - காவல்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ஆட்டோ & கார் ஓட்டுனர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ, கார்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலை குறைந்த வந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை வைரஸான ஓமைக்ரான் பரவல் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் இது டெல்டா வகை வைரஸை காட்டிலும் இரண்டு மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அமல்படுத்தியுள்ளார். இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளில் பொதுபோக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை இயங்காது. அதனால் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டனர். இந்நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள் பயணம் மேற்கொள்ள அதிகளவில் கட்டணம் வசூலித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு!

அதனால் காவல்துறையினர் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள வாடகை வாகனம் நிறுத்தும் ஸ்டேண்டில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதையடுத்து வாகன உரிமையாளருக்கு போலீசார் கூறியதாவது, ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது பயணிகள் செல்லும் தூரத்தை பொறுத்து கிலோ மீட்டருக்கு உரிய கட்டணங்களை வசூலிக்க வேண்டும். அத்துடன் மருத்துவ மற்றும் அவசர உதவிக்காக அழைக்கும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் விதியை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!