தனது தாயார் குறித்து பகிர்ந்த ‘பிக் பாஸ்’ அமீர் – ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தகவல்! வைரலாகும் வீடியோ!

0
தனது தாயார் குறித்து பகிர்ந்த 'பிக் பாஸ்' அமீர் - ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தகவல்! வைரலாகும் வீடியோ!
தனது தாயார் குறித்து பகிர்ந்த 'பிக் பாஸ்' அமீர் - ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தகவல்! வைரலாகும் வீடியோ!
தனது தாயார் குறித்து பகிர்ந்த ‘பிக் பாஸ்’ அமீர் – ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தகவல்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பரீட்சயமான போட்டியாளர் அமீர் தனது அம்மாவின் கல்லறையை விசிட் செய்து அவரை பற்றி சில உருக்கமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘பிக் பாஸ்’ அமீர்:

மக்களின் மனம் கவர்ந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிவடைந்தது. ஆரம்பம் முதலே பல்வேறு போட்டிகள், சண்டைகள் என அதிரடியாக ஒளிபரப்பாகி இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ரசிகர்களின் கவனம் பெற்று வந்தது. இம்முறை 3 வைல்ட் கார்டு போட்டியாளர் உட்பட 20 போட்டியாளர்களுடன் களம் கண்டு வந்த இந்த சீசன் சுமார் 106 நாட்கள் ஒளிபரப்பானது. இறுதியில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜு அறிவிக்கப்பட்டிருந்தார். இவரை தொடர்ந்து பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருந்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல், ஆட்டோ & கார் ஓட்டுனர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!

இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்நுழைந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தவர் போட்டியாளர் அமீர். நடன இயக்குனரான அமீர், விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட அமீர், தனது கடந்த கால நினைவுகளையும், தான் அம்மா பற்றிய சில நெகிழ்ச்சியான விஷயங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார்.

இதன் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கி இருந்த அமீர், அவ்வப்போது பாவனியுடனான பிரச்சனையில் சிக்கி இருந்தார். தொடர்ந்து ‘பிக் பாஸ்’ வீட்டில் நடத்தப்பட்ட போட்டிகளிலும் மிகவும் சாதுரியமாக விளையாடி முதல் பைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மக்களின் பேராதரவை பெற்ற அமீர் ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் 4 இடத்தை பிடித்திருந்தார். இப்போது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை முடித்து பேட்டி, லைவ் சேட் என பிசியாக இருந்து வரும் அமீர், தனது சொந்த ஊருக்கு சென்று தாயாரின் கல்லறையை பார்வையிட்டிருக்கிறார்.

அங்கு வைத்து தனது அம்மா குறித்து பேசிய அமீர், ‘சிறிய வயதில் நான் இந்த கல்லறைக்கு வந்தது. அதற்கு பின்பு இப்போது தான் வருகிறேன். என் அம்மா என்னோடு இருந்திருந்தால் அவர் பார்க்காத வாழ்க்கையை எல்லாம் அவருக்கு காட்டி இருப்பேன். எங்களோடு சேர்ந்து அம்மாவும் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்கள். சின்ன சின்ன விஷயத்தில் கூட அம்மா இல்லாததை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். சில நாட்கள் கனவில் அம்மா வரும் போது எழுந்து உட்கார்ந்து அழுதிருக்கிறேன். இப்போது ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறேன். என்னை எல்லோருக்கும் தெரிகிறது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இப்போது என் அம்மா என்னோடு இருந்திருந்தால் எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்திருப்பேன். முன்னாடி நான் சிறிய வெற்றி அடையும் போதெல்லாம் எனக்கு கொடுக்கும் மெடலை எனது கழுத்தில் போட்டு அதை அனைவருக்கும் தெரியப்படுத்துவார்கள். அவர்களுக்கு என்னை பற்றி அவ்வளவு கனவு இருந்தது. இப்போது நான் பிரபுதேவா மாஸ்டர் உடன் பேசுகிறேன். அம்மா ஆசைப்பட்டதை செய்திருக்கிறேன். ஆனால் அவர் என்னுடன் இல்லை. இருந்தாலும் அம்மா இருக்கும் இடத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!