தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழகத்தில் முழு ஊரடங்கினை அறிவிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதே போல் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் பொது முடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் விளைவாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இப்படியாக இருக்க, தற்போது தமிழகத்தில் வார ஊரடங்கும், பகுதி நேர ஊரடங்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனை அரசு அமல்படுத்தினாலும், மக்கள் அதனை சரிவர பின்பற்றுவது இல்லை என்று தான் கூற வேண்டும்.
கொரோனா பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!!
இதனால் கட்டுப்பாடுகள் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அதில் தமிழகத்தில் முழு பொது முடக்கத்தினை அமல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அப்படி செய்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல் அந்த மனுவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Yes correct, pls lock down
ஏற்கனவே போட்ட ஊரடங்குகே
நாட்ல பாதி பேர் வேல பிரச்சன வாழ்வாதார பிரசன்னைல இருந்து வெளிய வரல இதுல இன்னொரு ஊரடங்கு.