இந்தியாவில் ஓமைக்ரான் பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்? அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓமைக்ரான் தொற்றை தடுக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முழு ஊரடங்கு அமல்:
உலகத்தில் மொத்தம் 90 நாடுகளில் ஓமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, இமாச்சல், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – TTV தினகரன் விமர்சனம்!
இன்று வரை இந்தியாவில் 781 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சற்றும் முழுமையாக குறையாத பட்சத்தில் இந்த ஓமைக்ரான் தொற்று பாதிப்பு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமைக்ரான் தொற்று மிக வேகமாக பரவும் ஆற்றல் உடையதால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருக்கும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அரசு அனுமதி – அதிகரிக்கும் ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவலால் அனைத்து மாநிலத்திலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 9195 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று 7347 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 781 பேரில், 241 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.