பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அரசு அனுமதி – அதிகரிக்கும் ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

0
பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அரசு அனுமதி - அதிகரிக்கும் ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அரசு அனுமதி - அதிகரிக்கும் ஓமைக்ரான் பரவல் எதிரொலி!
பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு அரசு அனுமதி – அதிகரிக்கும் ஓமைக்ரான் பரவல் எதிரொலி!

அதிவேகத்தில் பரவி வரும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமையான இன்று மாநிலத்தில் தொற்று நோய் நிலைமையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். எனவே தேவைப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சிறிது நாட்கள் மூடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

கல்வி நிலையங்கள் மூடல்:

நாட்டில் இதுவரையிலும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸின் உருமாறிய வகையான ஓமைக்ரான் வகை தொற்று 781 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 241 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேருக்கு ஓமைக்ரான் வகை தொற்று பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா 167, குஜராத் 73, கேரளா 65 மற்றும் தெலங்கானாவில் 62 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் 11 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளது.

கொரோனா மஞ்சள் அலெர்ட் – மினி ஊரடங்கு அமல்! ஒமைக்ரான் எதிரொலி!

கடந்த திங்கள் கிழமை நிலவரப்படி மேற்கு வங்கத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,31,065 ஆக உயர்ந்தது அன்றைய தினம் புதிதாக 439 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 10 பேர் திங்கள் அன்று நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 19,726 ஆக உயர்ந்தது. மிகவும் அதி வேகத்தில் பரவும் தொற்றுநோயான ஓமைக்ரான் தொற்று பரவல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமையான இன்று மாநிலத்தில் தொற்றுநோய் நிலைமையை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் நாளை (டிச.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 20 நிறுவனங்கள் பங்கேற்பு!

தேவைப்பட்டால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சிறிது நாட்கள் மூடலாம் என்றும் அறிவித்துள்ளார். தெற்கு 24 பரகானாஸ், கங்கா சாகர் என்ற இடத்தில் ஒரு நிர்வாக ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர், கொல்கத்தாவுக்கு வரும் சர்வதேச விமானங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், கங்கா சாகர் மேளா காரணமாக நகரில் ரயில்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்றும், கொல்கத்தாவில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாட்டு மண்டலங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!