மாநிலத்தின் முக்கிய நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
மாநிலத்தின் முக்கிய நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மாநிலத்தின் முக்கிய நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மாநிலத்தின் முக்கிய நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் கரௌலி நகரில் கடந்த ஏப்ரல் 2ம் தேதியன்று வகுப்புவாத மோதல்கள் வெடித்ததை அடுத்து அந்நகரில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு இன்று (ஏப்ரல்.4) இரவு வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு

ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி நகரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அந்நகரில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அஜ்மீரின் பீவார் நகரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால், இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் வெடித்ததால், வகுப்புவாத பதட்டங்களை தூண்டிய சம்பவங்களுக்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!

இதனால் அம்மாவட்டத்தில் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர கரௌலி நகரில் கலவரத்துக்கு காரணமாக இருந்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அங்கு 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தவிர காவல்துறை பணியாளர்களும் அப்பகுதியில் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருகின்றனர். இப்போது நகரை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டதால், கரௌலியில் அமைதி நிலவுகிறது. இதற்கிடையில் கரௌலியில், ஏப்ரல் 2ம் தேதியன்று வகுப்புவாத மோதல்கள் வெடித்ததில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஏனென்றால் இந்த சம்பவத்தில் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்திருக்கும் நிலையில் கலகக்காரர்கள் வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து சேதத்தை ஏற்படுத்தினர். அதே போல வன்முறை வெடித்ததில், 35க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 2 டஜன் வாகனங்களை மர்ம நபர்கள் சூறையாடினர். இந்த கலவரத்தை தடுக்கும் விதமாக அந்நகரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று அதாவது ஏப்ரல் 4ம் தேதி வரை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!