தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிவேக பாதிப்புகளை கவனத்தில் கொண்டு இன்று (ஜன.10) முதல் தினசரி இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வரும் இம்மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி பொது முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் தற்போது அமலில் இருந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – மகர சங்கராந்தி பூஜை!
இந்நிலையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளைக் கருத்தில் கொண்டு, ஆந்திரப் பிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஆந்திராவில் நேற்று (ஜன.9) ஒரே நாளில் 1,257 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் ஜன.16ம் தேதி முழு ஊரடங்கு ரத்து – மருத்துவ குழு பரிந்துரை!
இது செப்டம்பர் 24ம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது ஆந்திர பிரதேசத்தில் கொரோனா ஒட்டுமொத்த நேர்மறை எண்ணிக்கை 20,81,859 ஆக அதிகரித்துள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளது.